search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்கைகோள் போன்"

    ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் செயற்கைகோள் போனுடன் வந்த ஆஸ்திரேலிய நாட்டவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #JaipurAirport #AustralianArrest #SatellitePhone
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் நேற்று பயணிகளின் உடைமைகளை சோதனையிடும் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது டெல்லி செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக வந்திருந்த ஆஸ்திரேலிய நாட்டவர் ஒருவரின் உடைமைகளை அவர்கள் சோதனையிட்டனர்.

    இதில், அவர் செயற்கைகோள் போன் ஒன்றை வைத்திருந்தது தெரியவந்தது. உடனே அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், பின்னர் அவரை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.  #JaipurAirport #AustralianArrest #SatellitePhone 
    ×